கிரான்ட்பாஸ் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளில் திருப்தி - ஹக்கீம். கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திருப்தியளிப்பதாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அக் கட்சியின் உயர் மட்டக் குழு ஒன்று நேற்று (12) கூடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தமது கட்சியினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எனினும் அவ் விசாரணைகள் திருப்தியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்
Posted on: Tue, 13 Aug 2013 09:16:33 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015