2009 தமிழின இன அழிப்பில் ஐநாவின் கட்டமைப்பு ரீதியான தோல்வி குறித்த இறுதி அறிக்கையை INNERCITY PRESS கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஐநா செயலர்Ban ki Moon ஐநா வின் பிரதி பொது செயலாளர் Jan Eliasson கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பிலிருந்து இது குறித்து எந்த கருத்துக்களையும் கண்டனங்களையும் காண முடியவில்லை. ஒரு இன அழிப்பிற்கு ஐநா சாசனத்திற்கு முரணாக உடந்தையாக இருந்து விட்டு ஐநா தப்பித்துக்கொள்ளும் இந்த அசமந்தப் போக்கிற்கு தமிழர் தரப்பு மௌனம் சாதிப்பது கவலையையும் பெரும் நம்பிக்கையீனத்தையும் தருகிறது. “அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?” என்பது குறித்து கூட தமிழர் தரப்பில் விவாதங்களைக் காண முடியவில்லை.
Posted on: Mon, 21 Oct 2013 06:40:11 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015