31ம் நாள் நினைவஞ்சலியும், - TopicsExpress



          

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். அச்சுப்பிரதி எடுக்க நண்பருக்கு தெரிவிக்க அமரர் இதயராஜன் லுமினா அன்னை மடியில் : 21 டிசெம்பர் 1983 — ஆண்டவன் அடியில் : 25 யூன் 2013 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இதயராஜன் லுமினா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். அன்புச் செல்வமே நிஷா நீ மீளாத் துயில் கொண்டு 31 நாட்கள் ஆனதம்மா..... மறைந்தது வெள்ளி அல்ல இன்னொன்று வாங்கி ஈடு செய்ய தங்கம் தொலைந்தால் பதில் ஒன்று வாங்கி விடலாம் வைரம் மறைந்தால் வைடூதியத்தை தேடி விடலாம் பவளம் தொலைந்தால் முத்துக் குளித்துவிடலாம் மாறீடு செய்ய முடியாத மாசற்ற எம் செல்வமே! எம் மனங்களைத் தொலைத்து தினம் தினம் உன் பிரிவால் மரணிக்கின்றோம் ஒருமுறை வந்து ஒரு வார்த்தை சொல்வாயா வடிக்க இனி விழிகளில் கண்ணீரும் இல்லை... இரத்தம் வற்றிய எம் இதயத்தில் - இனி துடிக்க நாடியில்லை நடை பிணமாய் எங்களை நீ ஆக்கி விட்டு கண் காணாத் தொலைவுக்கு ஏன் சென்றாய் எங்கள் நிஷாம்மா? எமது அன்புச் செல்வம் இதயராஜன் லுமினா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் படுத்தியோருக்கும், அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டோருக்கும் இறுதிப் பிரியாவிடைத் திருப்பலிகளில் பங்குகொண்ட அருட்த் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக 27-07-2013 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு Sint-Petruskerk Lange Brugstraat 30 Etten Leur என்னும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் திருப்பலியில் பங்கு கொண்டு பின்னர் அதனைத் தொடர்ந்து Lindenbleek 29, 4871 WH Etten Leur, Netherland என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றிச் செல்லுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு இதயராஜன் — நெதர்லாந்து செல்லிடப்பேசி: +31765017627
Posted on: Fri, 26 Jul 2013 04:42:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015