Kalaignar Karunanidhi திராவிடர் கழகத் - TopicsExpress



          

Kalaignar Karunanidhi திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிமீது தாக்குதல்! 28-9-2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய வாகனத்தை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருப்பதோடு; திராவிடர் கழகக் கொடிகளை சாய்த்தும், சுவரொட்டிகளை கிழித்தும் வெறியாட்டம் நடத்தியிருக்கிறது. அச்செயல்களை தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையும் காலிகளுக்கு துணைப் போய் திராவிடர் கழகத்தினர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள்கையை கடைசி மூச்சு வரை, வன்முறை சிறிதும் கலக்காமல் பரப்பி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள்மீதும், தொண்டர்கள்மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இப்படிப்பட்ட வன்முறைகளுக்கு துணை போவது இது முதல் முறை இல்லை என்றாலும், ஜனநாயகத்திலும் - கருத்துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளோர் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த செயலை கண்டிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.
Posted on: Mon, 30 Sep 2013 03:13:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015