இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்கள், இன்றிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரிய வெற்றியினைப் பெறுவதற்கு தவறினால், கூட்டமைப்பு இன்று கூறுகின்ற விடயங்கள், மகிந்த அரசு தமிழ் மக்கள் மீது நாடாத்துகின்ற அடக்குமுறை போன்ற அனைத்தையுமே இல்லை என்கிற ஒரு செய்தியை தமிழ் மக்கள் உலகிற்கு கொடுத்து விடுவதாக அமைந்து விடும். ஆகவே இவ்விடயத்தில் அனைவரும் மிகவும் கவனமாக செயற்பட்டு. ஜி.ரி.லிங்கநாதன் இல:04, கே.சந்திரகுலசிங்கம் இல:05 இந்த இரண்டு இலக்கங்களுக்கும் வாக்களிப்பதன் மூலம் ஒரு நல்ல சேவையாளர்களை வவுனியா மாவட்டத்திற்கு பிரதிநிதியாக அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். — in Vavuniya, Sri Lanka.
Posted on: Fri, 16 Aug 2013 13:50:43 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015