இந்து முன்னணி - TopicsExpress



          

இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல் By ஸ்ரீவில்லிபுத்தூர், First Published : 14 July 2013 12:21 AM IS IT ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் இந்து முன்னணி தலைவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர், கூனங்குளம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (34). இவர் நகர் இந்து முன்னணி தலைவராக உள்ளார். வேலூரில் அமைப்பின் மாநிலத் தலைவர் வெள்ளையப்பன் JI கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பில் இஸ்லாமியர்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. மேலும் ஜூலை 2-ஆம் தேதி இக்கொலையைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதிலும் இஸ்லாமியர்களை விமர்சனம் செய்து பலர் பேசினார்களாம். இதன் தொடர்ச்சியாக ஜூலை 5-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஈஸ்வரனின் செல்போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர் இஸ்லாமியர்களை எவ்வாறு தீவிரவாதிகள் என்று கூறி, சுவரொட்டி ஒட்டலாம். ஆர்ப்பாட்டத்தில் எப்படி ஆபாசமாகப் பேசலாம் என்று கூறி, கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம். இது குறித்து ஈஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர், சையது முகமது உசைன் மகன் முகமது இத்திரியாஸ் அப்பாஸ் (25) என்பவர் மிரட்டியது தெரிய வந்தது. மேலும், இதில், சங்கரன்கோவில், அப்துல் கபூர் மகன் முகமது செரிப் (29) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட நாளில், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த இருவரும் வடக்கு ரத வீதியில் இருந்து செல்போனில் ஈஸ்வரனுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக சனிக்கிழமை மாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.d.mani
Posted on: Sun, 14 Jul 2013 10:53:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015