குறள் 178: அஃகாமை - TopicsExpress



          

குறள் 178: அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். கலைஞர் உரை: தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். மு.வ உரை: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும். சாலமன் பாப்பையா உரை: செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே. பரிமேலழகர் உரை: செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். (அஃகாமை ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.). மணக்குடவர் உரை: செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது. Translation: What saves prosperity from swift decline? Absence of lust to make anothers cherished riches thine!. Explanation: If it is weighed, what is the indestructibility of wealth, it is freedom from covetousness.
Posted on: Mon, 25 Nov 2013 16:04:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015