குறள் 847: அருமறை சோரும் - TopicsExpress



          

குறள் 847: அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. கலைஞர் உரை: நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள். மு.வ உரை: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான். Translation: From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery. Explanation: The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
Posted on: Mon, 15 Jul 2013 09:07:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015