தஸ்லிமா நஸ்ரின் தேசப்பிதா மகாத்மா காந்தியைக் கடந்த இரண்டு நாட்களாகக் கேடு கெட்ட முறையில் ட்விட்டரில் அவமதித்து வருகிறார். பெண்ணுரிமை, செக்குலரிசம் என்றெல்லாம் சங்கு ஊதி இவருக்கு இந்தியாவில் தங்க புகலிடம் வாங்கிக் கொடுப்பதில் முன்னணியில் நின்ற ஞானபீட விருது பெற்ற கிரீஷ் கர்னாட், அருந்ததி ராய் போன்ற ’மகா எழுத்தாளர்கள்’ கூட இவர் சொல்வதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களுமாவது எழுப்பலாமே - எங்கள் தேசப்பிதாவை அவமதித்த தஸ்லிமாவை இந்தியாவை விட்டு வெளியே அனுப்புக அரசே! ட்விட்டரில் https://twitter/taslimanasreen என்று தேடினால் இந்தப் புழுத்து நாறும் வசைகள் கண்ணில் படும். நான் பொதுவாக எந்த நிலைத் தகவலையும் tag செய்வதில்லை. இந்தச் செய்தியின் முக்கியத்துவம் கருதி அதைச் செய்ய நேர்ந்தது. என் இனிய நண்பர்கள் எல்லோரும் (தற்போது 4076 பேர்) தத்தம் காலக் கோட்டில் இதை தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம்.
Posted on: Thu, 03 Oct 2013 14:43:39 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015