புதுடில்லி பேருந்து - TopicsExpress



          

புதுடில்லி பேருந்து பாலியல் வழக்கின் முதல் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது புதுடில்லியில் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், இதனால் இந்தியாவெங்கும் பெரும் போராட்டம் வெடித்தது, அந்த கொடூரத்தை செய்த குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான் என்று போலிஸ் கூறியது. இந்த கற்பழிப்பில் ஈடுப்பட்டதில் 17 வயது கொண்டவனும் ஒருவன், அவன் தான் கொடூரமாக முதல்முறை கற்பழித்து பின் அந்த பெண் மயக்கம் அடைந்த பின் மீண்டும் ஒரு முறை கற்பழித்தவன். அவன் மைனர் என்று கூறி அவனை சிறார் சிறையில் அடைத்தனர், அவன் மீதான வழக்கும் மைனர் கோர்ட்டில் மைனர் சட்டங்களுக்குட்பட்டே நடக்கிறது. இன்று இவன் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது, இவனுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை என்ற பெயரில் மூன்றாண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படும் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. # கற்பழிக்க கொலை செய்ய தெரிந்தவன் எல்லாம் மைனர் சிறுவன் என்பது அப்பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி
Posted on: Thu, 11 Jul 2013 06:35:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015