பட்டத்து யானை திரைப்படத்தில் வரும் வசனத்தை நீக்கக்கோரி சமையல் கலைஞர்கள் முதல்வருக்கு மனு சமீபத்தில், வெளிவந்துள்ள “பட்டத்துயானை” என்ற திரைப்படத்தில், கதாநாயகன் சமையல் தொழிலை செய்வராக வருகிறார். ஒரு previousவில்லனாக வரும் நடிகர் “சமையல் தொழிலை” கேவலப்படுத்தும் விதமாக “ஆப்ட்ரால் சமையல்கார நாய்” என்று பேசும் விதமாகபடத்தை எடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழக முதல்வர் அவர்களுக்கு புகார் மனு அனுப்பியுள்ள சேலம் மாவட்ட சமையல் கலைஞர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செந்தில், இன்றைய காலத்தில், சாதி, சமைய வேறுபாடு இல்லாமல் எல்லா சமூகத்தினரும் சமையல் தொழிலை செய்து வருகின்றனர். சமையல் தொழிலுக்கென பட்ட, பட்டயப்படிப்புகளும் வந்துவிட்டது, இன்றைய பொறியியல் பட்டதாரிகளை காட்டிலும் கூடுதலான சம்பளத்தை சமையல் சார்ந்தபணியில் உள்ளவர்கள் பெற்று வருகிறார்கள். இந்ததிரைப்படத்தில் வரும் வசனம் எங்களின் மனதை மிகவும் புண் படுத்துகிறது. உடனடியாக “பட்டத்து யானை”திரைப்படத்தில் வரும் இந்த வசனத்தை நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்துசமூகத்தையும் உள்ளடக்கிய எங்களின் “தென்னிந்திய சமையல் கலைஞர்கள் நலச்சங்க த்தின்” சார்பில் பெரிய போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதனை தெரிவித்துக் கொள் கிறோம். இதுபோல,வேறு தொழிலையும் இழிவு படுத்தும் எந்த வார்த்தையையும், வசனத்தையும் இனிமேல் திரைப்படங்களில் கொண்டுவருவதை தமிழக அரசு தடுக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.
Posted on: Mon, 02 Sep 2013 10:48:37 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015