முஸ்லிம் உம்மாவுக்கு என்ன பிரச்சினை ஏற்பாட்டாலும் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் இன்றி ஜம்இய்யா தனது சக்திக்கு ஏற்றவகையில் அதற்கான நடடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் இரண்டு விதமாக அமைகிறது. முதலாவது அல்லாஹ்விடத்தில் துஆ செய்வது இரண்டாவது உரியவர்களுடன் தொடர்புகொண்டு அதற்கான சரியான நடவடிக்கைகளை மேறகொள்வது. நாட்டின் எங்காவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை முழு நாட்டுக்கும் பெரிதுபடுத்தி மக்களை பீதியடையச்செய்து வேறு சில அசம்பாவிதங்களுக்கு காரணமாகிவிடுவதை ஜம்இய்யா விரும்புவதில்லை.
Posted on: Mon, 05 Aug 2013 11:19:05 +0000