பிராமணபெண்ணும் ஒரு - TopicsExpress



          

பிராமணபெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான். பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது. அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள். கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 47. மநு தர்மப்படி எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா? என் காலத்தில் என் கண்ணெதிரே எத்தனையோ பெண்களுக்கு மநு மணங்கள் நடந்திருக்கின்றன. அவர்களை எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே? அப்படியென்றால் எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரமாண்டமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு காட்டவேண்டும். அதுவும் மநுமணம் செய்துகொண்டதாக , அதாவது பால்ய திருமணம் செய்துகொண்ட ஜோடியாக இருக்கவேண்டும். அல்லவா? சரி, இதோ உதாரணம். ராமர் சீதா தெரியுமா? அவர்கள்தான்.சற்று முன்பே சொன்னேனே. பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு... கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் என்று. அதேபோல்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிருந்த பருவத்திலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார் இவர். கம்பராமாயணத்தலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கிறார். “ராமரை சீதை பார்த்த போது, சீதையின் தேகம் வெட்கத்தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்கமுடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச் சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது. சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்க முடியாமல் அறுந்து உதிர்ந்து, கீழே உருண்டோடுகின்றன. ராமனை... இப்படியாக சீதையை பாதித்தாள். அவனது கனவுகளை சோதித்தாள்” என்றல்லவா கம்பர் எழுதியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண பயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும் என்று நமக்கு நியாமான சந்தேகம் எழலாம். கம்பர்.. தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்டவேண்டாம் என நினைத்திருக்கலாம். ஆனால், வால்மீகி ராமாயணத்தில், தோஷாத் தாரக்தியாம்பதி சிந்தையா மான தர்மாத்மா சோபாத்யாய சபாந்த்த வஹா என்கிறார் ராமன். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி. விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜனின் அரண்மனைக்கு வரும்போது தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கிறது. கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கல்யாணத்தின்போது ராமனுக்கு 12 தான். சீதைக்கு வயது ஆறேதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது. வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள். "அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார். இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள். ‘நப்ரமாணி கிரதப்மாணி பால்யே பாலேன பீடிதஹ்” ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே? குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை... என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் அதாவது மநு ஸ்மிருதிக்கு கட்டுப்பட்ட கல்யாணமாகவே நடந்திருக்கிறது என்பது புரிகிறது. உதாரணம் சொல்லியாகிவிட்டது. கல்யாணம் என்றதுமே இக்காலத்தில் “மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம்” என்ற Trade Mark மந்த்ரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்? “அடியே இந்த புனிதமான நூலை உன்னுடைய கழுத்தில் கட்டுகிறேன். இது இருந்தால்தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் - உலகம் நம்பும். அதற்காகத்தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.” இதுதான் இந்த மந்த்ரத்தின் அர்த்தம். நான் சில பல அத்யாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே. பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள். பனை - தால் அதனால்தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன். அப்படிப்பட்ட Symbol தான் தாலி. அதாவது ஊருக்கு தெரியவேண்டும். நீதான் என் மனைவி என்று. அதற்காக கட்டுகிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான். மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்றுதான். அடுத்ததாக பொதுவாகவே பெண்களுக்கு வித்யா ரீதியாக என்ன வாய்ப்புகளை கொடுத்தது மநு?.... வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்ததையும் சம்ஸாதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால், மநு உறுதியாக உரத்துச் சொன்னது. பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது. அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்) கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
Posted on: Thu, 11 Jul 2013 16:30:02 +0000

Trending Topics




© 2015